அந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், கொடிகொண்டா பகுதியில் கண்டெய்னர் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சோதனையை தீவிரப்படுத்திய போலீசார், போதைப்பொருள் கடத்தி வந்த வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. அந்த கண்டெய்னரில் 294 பைகளில் இருந்த சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 492 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்தனர்.