கனமழை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சூழ்ந்த வெள்ளம்!

Estimated read time 0 min read

தூத்துக்குடியில் கொட்டி தீர்த்து வரும் மழையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நீரால் சூழப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழை வெளுத்து வாங்கி வருகிறது.

தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழையால்  கோரம்பள்ளம் குளம் உடைந்தது. இதனால் அருகில் உள்ள கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது.  இதேபோல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகர், ஆத்தூர், ஏரல்,  திருச்செந்தூர், காயல்பட்டினம், உடன்குடி, ஆறுமுகநேரி, குலசேகரபட்டினம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், உள்படப் பல இடங்களில் கனமழையால் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author