புரோ கபடி : புனேரி பல்டன் இமாலய வெற்றி!

Estimated read time 1 min read

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் நேற்றையப் போட்டியில் புனேரி பல்டன் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 31 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.

பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளன.

இந்நிலையில் நேற்றையப் போட்டி பாட்னாவில் நடைபெற்றது. இதில் புனேரி பல்டன் – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் விளையாடியது.

இப்போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே புனேரி பல்டன் அணி தன் ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. ஆட்டம் முடிவில் புனேரி பல்டன் அணி 60-29 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

இதன்மூலம் இரண்டாவது இடத்தில இருந்த புனேரி பல்டன் அணி 16 போட்டிகளில் 12 போட்டிகளில் வெற்றி பெற்று 68 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author