புதுடெல்லி: இங்கிலாந்து அணியுடன் நடந்து வரும் டெஸ்ட் தொடரில், எஞ்சியுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷ்ரேயாஸ் அய்யர் தேர்வு செய்யப்படாத நிலையில், கோஹ்லி சொந்த காரணங்களுக்காக இந்த போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்.
இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது டெஸ்ட் ராஜ்கோட்டில் பிப்.15ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், எஞ்சியுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், ரஜத் பத்திதார்,
சர்பராஸ் கான், துருவ் ஜுரெல் (கீப்பர்), கே.எஸ்.பாரத் (கீப்பர்), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.