22ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்: அலுவல் கூட்டத்தொடரில் முடிவு

Estimated read time 0 min read

இன்று,தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து, கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்தப்படவேண்டும் என்று அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, நாளை இரங்கல் திர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறவுள்ளது.

14, 15ஆம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்குவார்.
பின்னர், 16 ,17, 18 ஆகிய மூன்று தினங்களும் சட்டப்பேரவை கூட்டமானது விடுமுறை விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து 19ஆம் தேதி, நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
20ஆம் தேதி வேளாண்மை நிதிநிலை அறிக்கையும், தொடர்ந்து 21, 22ஆம் தேதிகளில் இந்த அறிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்று பதிலுரை வழங்கப்பட உள்ளது.

அன்றோடு சட்டசபை கூட்டம் நிறைவுறுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author