பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விசாரணையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) இரண்டு பேரை கைது செய்துள்ளது.
தெற்கு காஷ்மீரின் பிரபலமான சுற்றுலா தலமான பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட மற்றும் 16 பேர் காயமடைந்த கொடிய தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் மற்றும் ஆதரவளித்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பட்கோட்டைச் சேர்ந்த பர்வைஸ் அகமது ஜோதர் மற்றும் பஹல்காமின் ஹில் பார்க்கைச் சேர்ந்த பஷீர் அகமது ஜோதர் என தெரிய வந்துள்ளது.
தாக்குதலுக்கு முன்னர், ஹில் பார்க்கில் உள்ள ஒரு வீட்டில் மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம், உணவு மற்றும் உதவிகளை வழங்கியதன் மூலம், இரு நபர்களும் தெரிந்தே அவர்களுக்கு அடைக்கலம் அளித்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளுக்கு உதவிய 2 பேர் கைது
