முதல்வர் விஜய் தலைமையில் நாளை தமிழக எம்.பி.க்கள் கலந்தாய்வு கூட்டம்!

Estimated read time 0 min read

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து, அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

தொகுதி மறுவரையறை பணிகளால், தமிழகத்திற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்களுடனான கலந்தாய்வு கூட்டம், நாளை பிற்பகல் 3:00 மணிக்கு, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில், முதல்வர் விஜய் தலைமையில் நடக்க உள்ளது.

இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ்கள், புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் வாயிலாக, தமிழகத்தை சேர்ந்த அனைத்து லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author