‘கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்த இந்திரா காந்தி’: காங்கிரஸை கடுமையாக சாடும் பிரதமர் மோடி 

முக்கியத்துவம் வாய்ந்த கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய இந்திரா காந்தியின் அரசாங்கத்தை இன்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நலன்களுக்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டிருக்கிறது என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் கச்சத்தீவை இலங்கைக்கு எப்படி ஒப்படைத்தது என்பது தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் மூலம் சமீபத்தில் வெளியாகியது.

இந்நிலையில், இது குறித்து இன்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அறிக்கை கண்களை திறந்து விட்டது என்றும், திடுக்கிடும் தகவலை கூறியுள்ளது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author