பாப்பாக்குடிபைந்தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம்

Estimated read time 1 min read

பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் திங்கட் பொழிவு சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சிக்குப் பணி நிறைவு பெற்ற| தமிழாசிரியர் மு.விசுவநாதன் தலைமை தாங்கினார் ,

அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் சங்க மாநிலத் தலைவர் கவிஞர் ந. சுப்பையா முன்னிலை வகித்தார், பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் நிறுவநர் தமிழ்ச்செம்மல் பாவலர் பாப்பாகுடி அ. முருகன் அனைவரையும் வரவேற்றார்,

முன்னதாக இ. முருகேசன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார், கவிஞர்கள் வீரை ஆ. ராஜேந்திரன், பேட்டை த. ராஜேந்திரன், ஆழ்வை ஆயில்யன், பாப்பாக்குடி இ. முருகேசன் ஆகியோர் கவிதை வழங்கினர்

அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை செயலாளர் சேவைச் செம்மல் ச.இலக்குமணன் சிந்தனைக்கு ஒரு குறள் வழங்கினார், அகவை முதிர்ந்த தமிழறிஞர் ரெ. துரைராஜ் கம்பர் கவியமுதம் வழங்கினார், பள்ளக்கால் கா. கிருஷ்ணன் சிற்றுரையாற்றினார் பொட்டல்புதூர் தில்லை. சுப்பிரமணியன் “தமிழும் திருக்குறளும் “என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்,

முக்கூடல் மு. ராஜதுரை கழுகுமலை பாலசுப்ரமணியம், மகாகல்வி தொண்டு அறக்கட்டளை அறங்காவலர் மூ. மகாராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்,

ந. தங்கமாரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார் நிறைவாக சி. சீதாராமன் நன்றி கூறினார் நிகழ்ச்சியில் பணி நிறைவு பெற்ற பட்டதாரி ஆசிரியர் ச. வேதமூர்த்தி, அ. ராஜேந்திரன், வி. கிருஷ்ணன் .இ.திருமலை, கெ. உச்சுமகாளி,தி த. கணேசன் கவிஞர். R மரகதசுப்பிரமணியன் ச.முருகன்,உள்ளிட்ட 1 ஏராளமான தமிழ் அன்பர்கள் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பு சேர்த்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author