நீதிபதி தலைமையில் குழு அமைத்து விரிவான விசாரணை நடத்துக;காடேஸ்வரா சுப்பிரமணியம்

Estimated read time 0 min read

கரூர் கோயில் நில விவகாரத்தில் நீதிபதி தலைமையில் குழு அமைத்து விரிவான விசாரணை நடத்த வேண்டுமென, இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயில் நிலங்கள் மீதான தடையை நீக்கும் அவசரம் ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக மன்னர்கள், நாயக்க மன்னர்கள் மற்றும் விஜய நகர மன்னர்கள் கோயிலுக்கு கொடுத்த நிலங்கள், கோயில் பணியாளர்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டவை என்றும்,

அப்படியிருக்க, இவை கோயில் நிலங்கள் இல்லையென எவ்வாறு கூற முடியும்? என்றும் வினா எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டம் 1959 உருவாக்கப்பட்டதே கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்குத்தான் என்றும்,

ஆனால், தற்போதைய அரசின் நடவடிக்கைகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரை வார்க்கும் விதமாகவே அமைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் உள்ள முழு உண்மையையும் கண்டறிய, உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு தனித்தியங்கும் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

You May Also Like

More From Author