ஸ்பெயினில் கொட்டி தீர்த்த மழை – பலி எண்ணிக்கை 205 ஆக உயர்வு!

Estimated read time 0 min read

ஸ்பெயினில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென கனமழை பெய்தது. ஓராண்டு பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கனமழை காரணமாக ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது.

100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிக பாதிப்புக்குள்ளான வெலன்சியா பகுதியில் மட்டும் 202 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது

Please follow and like us:

You May Also Like

More From Author