கிழக்குப் போர் மண்டலப் பிரிவின் இராணுவப் பயிற்சி

சீன மக்கள் விடுதலைப் படையின் கிழக்குப் போர் மண்டலப் பிரிவு ஏற்பாடு செய்தபடி, அக்டோபர் 14ஆம் நாள், தரைப்படை, கடல் படை, வான் படை, ராக்கெட் படை முதலியவை, தைவான் நீரிணை, தைவான் தீவின் வடக்கு, தெற்கு பகுதிகள் மற்றும் தீவிற்கு கிழக்கு பகுதியில் 2024-பி எனும் இராணுவப் பயிற்சியை நடத்தின. “தைவான் சுதந்திரம்” என்ற பிரிவினைவாத சக்திகளுக்கு கடுமையான எச்சரிக்கை இதுவாகும். தேசிய இறையாண்மையையும் உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கத் தேவையான சரியான நடவடிக்கை இதுவும் ஆகும் என்று இப்பிரிவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author