படகு மூலம் இலங்கைக்கு மளிகைப் பொருட்கள் கடத்தல்!

Estimated read time 0 min read

தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இனிகோ நகர் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக சில மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்று சோதனை நடத்தியபோது, 70 லட்ச ரூபாய் மதிப்பிலான 3 ஆயிரம் கிலோ புளி, மளிகைப் பொருட்கள் மற்றும் மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author