மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் மீனவர்கள் நள்ளிரவு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.
தமிழகத்தில் கிழக்கு கடற்கரை மாவட்டங்களில் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி தொடங்கியது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்கால் உள்பட 14 கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு மீனவர் குடும்பங்களுக்கு தமிழக அரசால் தலா ரூ.8000 தடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது.
தடைகாலத்தில் மீனவர்கள் தங்களது படகுகள், மீன்பிடி உபகரணங்களை சீரமைத்தனர். , இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவு பெற்ற நிலையில். நள்ளிரவு முதல் கடலுக்கு மீனவர்கள் சென்றனர். முன்னதாக கடந்த 2 நாட்களாக ஐஸ் கட்டிகள், வலைகள், மீன் பிடி உபகரணங்களை படகுகளில் ஏற்றி தயார் நிலையில் இருந்தனர். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் மீனவர்கள் படகுகளுக்கு மாலை அணிவித்து, தீபாராதனை , பூஜை செய்து கடலுக்கு புறப்பட உள்ளனர். மீனவர்கள் 61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கடலுக்குச் செல்கின்றனர். இதன்மூலம் மீன்கள் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.