இன்று கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடுகிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

Estimated read time 0 min read

தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தண்ணீரை திறந்துவிட்டார். திறக்கப்பட்ட தண்ணீர் இன்று இரவு கல்லணை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் இருந்து தண்ணீரை இன்று மாலை 4 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து விடுகிறார்.

மேட்டூா் அணை ஜூன் 12 இல் திறக்கப்பட்டால், கல்லணையை ஜூன் 16 இல் திறப்பது வழக்கம். அதன்படி திறக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், விரைவான நீா் வரத்து இருப்பதால், கல்லணைக்கு சனிக்கிழமை இரவே தண்ணீா் வந்துவிடும். இதனை முன்னிட்டு கல்லணை மதகுகள் சீரமைக்கப்பட்டு, கல்லணை சுவர்கள் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு உள்ளது. இதேபோல் கரிகால சோழன், காவேரித்தாய், அகத்தியர் முனிவர், ராஜராஜசோழன் சிலை உள்ளிட்ட சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு கல்லணை புதுப் பொலிவுடன் காட்சியளிக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author