தமிழ்நாட்டில் வருடாந்திர மீன்பிடி தடை அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் விசைப்படகு மீனவர்கள் ஆர்வத்துடன் மீன்பிடி நடவடிக்கைகளைத் தொடங்கினர்.
முன்னதாக, ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கிய இந்தத் தடை, கடல் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதையும், இனப்பெருக்க காலத்தில் மீன்களின் எண்ணிக்கை மீண்டும் வளர அனுமதிப்பதையும் நோக்கமாகக் கொண்டது.
தடை முடிவுக்கு வருவதற்கு முன்னதாக, சென்னையின் காசிமேட்டில் உள்ள மீனவர்கள் இயந்திரங்களை பழுதுபார்த்தல், வலைகளை சரிசெய்தல், டீசல் நிரப்புதல் மற்றும் சேமிப்பிற்காக பனியை ஏற்றுதல் மூலம் தங்கள் படகுகளைத் தயார் செய்தனர்.
இதையடுத்து தடை முடிந்தவுடன் விசைப்படகுகள் கடலுக்குள் ஆர்வத்துடன் புறப்பட்டன.
மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் கடலுக்குள் செல்ல முடியாமல் தவிக்கும் மீனவர்கள்; பின்னணி என்ன?
