மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஜூலை 14 இல் தரிசனத்திற்கு அனுமதி இல்லை!

Estimated read time 0 min read

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை ஜூலை 14ஆம் தேதி சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா ஜூலை 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்,

பஞ்சமூர்த்திகளுடன் குடமுழுக்கு விழாவிற்கு முந்தைய நாளான ஜூலை 13ஆம் தேதி நள்ளிரவு திருக்கோயிலில் இருந்து புறப்பாடாகி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் எழுந்தருள உள்ளனர். இதனால் அன்றைய தினம் மாலை 6 மணி வரை மட்டும் பக்தர்கள், தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author