மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்களை அமைக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், போதைப் பழக்கத்துக்கு மாற்றாக விளையாட்டு ஒழுக்கத்தையும், சமூகப் பொறுப்பையும் இளைஞர்களிடையே வளர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த இளைஞர் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
அனைவருக்கும் விளையாட்டு, அனைத்து இடங்களிலும் விளையாட்டு” என்ற இலக்குடன், கல்வி நிறுவனங்களை போதைப்பொருள் அற்ற வளாகங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்களை அமைக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விளையாட்டில் ஆர்வமும் திறமையும் கொண்ட 8 முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு உலகத் தரத்திலான பயிற்சி வழங்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும்,
தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்கும் 500 விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி வழங்க கூடுதலாக 22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு மொத்தம் ஆயிரத்து 51 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
