சீன அரசவை செய்தி அலுவலகம் 24ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் நடத்தி, சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போரின் 80ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மாநாடு பற்றிய ஏற்பாடுகளை வெளியிட்டது.
செப்டெம்பர் 3ஆம் நாள் நடைபெறவுள்ள மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்துவார் என்று தெரிவிக்கப்பட்டது.
பெய்ஜிங் மாநகரிலுள்ள தியன் அன் மன் சதுக்கத்தில் மாபெரும் இராணுவ அணி வகுப்பு நடைபெறும். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இராணுவ அணி வகுப்பை பார்வையிடுவார்.
ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போரில் ஈடுபட்டுள்ள மூத்த படைவீரர்கள், மூத்த தொழிலாளர்கள், ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போரில் தளபதிகளாக இருந்தவர்கள் அல்லது தங்களின் குடும்பத்தினர்கள் ஆகியோருக்கு, சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போரின் 80ஆம் ஆண்டு நிறைவு பதக்கங்கள் வழங்கப்படுவர்.
ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் வெற்றி பெற்றதற்கு முக்கிய பங்காற்றியுள்ள வெளிநாட்டு நண்பர்கள் மற்றும் தொடர்புடைய குடும்பத்தினர்கள் இதில் கலந்துகொள்ள அழைக்கப்படுவர்.