கென்யா அரசுக்கு எதிராக போராட்டம் -11 பேர் சுட்டுக் கொலை!

Estimated read time 1 min read

கென்யா தலைநகர் நைரோபியில் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 1990-ம் ஆண்டு கென்யாவில் சுதந்திரமாகத் தேர்தல் நடத்தக்கோரி போராட்டம் நடைபெற்றது.

அதன் 35-ம் ஆண்டு நினைவையொட்டி நைரோபியில் தற்போதைய அரசை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கூட்டத்தைக் கலைக்கத் தண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய போலீசார், பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

You May Also Like

More From Author