சீன மனித விண்வெளிப் பயணத்துக்கான நிறுவனம் வெளியிட்ட செய்தியின்படி, பெய்ஜிங் நேரப்படி, ஏப்ரல் 30ஆம் நாள் பிற்பகல் 13:08 மணியளவில், சீனாவின் ஷென்சோ-19 எனும் விண்வெளி கலத்தின் திரும்பு கலன் பூமிக்கு வெற்றிகரமாகத் திரும்பியுள்ளது.
இவ்விண்வெளி கலத்தில் பயணித்த விண்வெளி வீரர்கள் சைஜூஷே, சோங்ல்லின்தோங், வாங் காவ்ஷெ ஆகிய மூவரின் உடல் நிலை சீராக உள்ளது. இது வரை, ஷென்சோ-19 எனும் விண்வெளி கலத்தின் கடமை முற்றிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.