வைகாசி விசாகத்தையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக விடையாற்றி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தொடர்ந்து அன்றைய தினம் இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்னர் மே 30-ஆம் தேதி நடைபெறும் வைகாசி விசாக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
