பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான (243 இடங்கள்) தனது சங்கல்ப பத்திரத்தை (தேர்தல் அறிக்கை) தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) பாட்னாவில் வெளியிட்டது.
முதல்வர் நிதீஷ் குமார், பாஜக தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் மற்றும் கூட்டணியின் முக்கியத் தலைவர்களான ஜிதன் ராம் மாஞ்சி, சிராஜ் பாஸ்வான் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று, நவம்பர் 14 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் அறிக்கையில், NDA கூட்டணி பல முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளது.
விவசாயிகளுக்கு ரூ.9,000 நிதி; ஆளும் கட்சியின் தேர்தல் வாக்குறுதி
