பிரதமரை நேரில் சந்தித்த PTR பழனிவேல் தியாகராஜன்; காரணம் என்ன?

கடந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்த போது, மதுரையில் அவரை நேரில் சந்தித்தது எதற்காக என்பதை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் PTR பத்திரிகையாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
“அரசாங்கத்தை சிறப்பாக நடத்துவது என்பது சாதாரண பணி கிடையாது. அதையெல்லாம் கடந்துதான் நாங்களும், முதல்வரும் பணி செய்து வருகிறோம்”.
“இன்றுகூட ஒரு நாளிதழில் எனக்கும், பிரதமருக்கும் தனிப்பட்ட உறவு இருப்பது போல் செய்தி வந்துள்ளது. முதல்வர் கொடுத்த பணியைத் தான் நான் செய்தேன். அதனால் தான் மதுரைக்குச் சென்று பிரதமரை வரவேற்று வழி அனுப்பி வைத்தேன், அதில் எந்த அரசியலும் கிடையாது, அரசாங்கத்தின் பணியை நான் செய்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author