திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் மைய நிகழ்ச்சியாக, வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி மாலையில் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
வழக்கமாக, மகா தீபத்தின் போது சுமார் 2,500 பக்தர்கள் அண்ணாமலையார் மலை மீது ஏறிச் சென்று தீப தரிசனம் காண அனுமதிக்கப்படுவது வழக்கம்.
ஆனால், கடந்த ஆண்டு பெஞ்ஜல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் மண் சரிவில் ஒரே வீட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மகாதீபம்: மலை ஏற பக்தர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி உண்டா?
