12-12-2025 மற்றும் 13-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
14-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதல்:
12-12-2025 முதல் 14-12-2025 வரை: தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் அக்டோபர் திங்கள் சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு, சீனா மீதான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமெரிக்கா பல முறை வெளியிட்டன. அமெரிக்காவின் [மேலும்…]
ஜோதிட சாஸ்திரத்தின்படி இன்றைய நாள் பல முக்கிய கிரக மாற்றங்களுடன் தொடங்குகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நீடித்து வந்த ‘கண்டமூல’ நட்சத்திரத்தின் தாக்கம் [மேலும்…]
இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, வெள்ளிக்கிழமை அன்று சரிந்தன. நிதித்துறை பங்குகளில் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் கச்சா எண்ணெய் [மேலும்…]
சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் பாதியில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொருளாதாரச் செயல்பாடு பொதுவாக [மேலும்…]
காவிரி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாமக சௌமியா அன்புமணி, கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் காவேரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் மதிக்கவே [மேலும்…]
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து, அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தொகுதி மறுவரையறை பணிகளால், தமிழகத்திற்கு [மேலும்…]
அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை பெறுவதற்காக வெளிநாட்டினர் மேற்கொள்ளும் ‘பிரசவ சுற்றுலா’வுக்கு தடை விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் [மேலும்…]