சென்னை எழும்பூர் பாந்தியன் ரவுண்டானா பகுதியானது 5 முனை சந்திப்பு மற்றும் 2 ரவுண்டானாக்களை உள்ளடக்கியதாகும். எனவே, அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதை சீர்படுத்த தற்காலிகமாக நாளை (9-ந்தேதி) காலை 8.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
* ருக்மணி லட்சுமிபதி சாலையானது பாந்தியன் ரவுண்டானாவிலிருந்து மாண்டியத் சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும்.
* ருக்மணி லட்சுமிபதி சாலையில் எத்திராஜ் சாலையில் இருந்து வரும் வாகனங்களை ருக்மணி லட்சுமிபதி சாலை மற்றும் மாண்டியத் சாலை சந்திப்பில் இருந்து இடதுபுறமாக திரும்பி மாண்டியத் சாலை வழியாக எழும்பூர் அருங்காட்சியகம் சர்வீஸ் சாலை சென்று பாந்தியன் சாலை வழியாக பாந்தியன் ரவுண்டானா செல்லலாம்.
* மாண்டியத் சாலை மற்றும் மாண்டியத் லேனிலிருந்து வரும் வாகனங்கள் ருக்மணி லட்சுமிபதி சாலையின் இடதுபுறம் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மெக்சிகோவின் முன்னணி போதைப்பொருள் கடத்தல் தலைவனான ‘எல் மெஞ்சோ’ (El Mencho) என அழைக்கப்படும் நெமேசியோ ஒசெகுவேரா, அமெரிக்காவின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் [மேலும்…]
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வசிக்கும் ‘ஜாரவா’ பழங்குடியினர், உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார்கள். சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவிலிருந்து [மேலும்…]
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹஜ்ரத் என்ற கார் ஓட்டுநர், டெல்லியில் உபெர் நிறுவனத்தில் இணைந்து சுமார் 50,000 பயணங்களை வெற்றிகரமாக முடித்து ஒரு புதிய [மேலும்…]
காஞ்சிபுரம் புதுச்சேரி ஈரோடு சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய். அதன் தொடர்ச்சியாக இன்று [மேலும்…]
பீகாரை தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த நவம்பர் [மேலும்…]
விரைவு ரயில் சேவையின் முன்னோட்டமாக டெல்லியில் இருந்து மீரட் வரைக்கும் செல்லும் வகையில், புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். [மேலும்…]