சென்னை எழும்பூர் பாந்தியன் ரவுண்டானா பகுதியானது 5 முனை சந்திப்பு மற்றும் 2 ரவுண்டானாக்களை உள்ளடக்கியதாகும். எனவே, அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதை சீர்படுத்த தற்காலிகமாக நாளை (9-ந்தேதி) காலை 8.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
* ருக்மணி லட்சுமிபதி சாலையானது பாந்தியன் ரவுண்டானாவிலிருந்து மாண்டியத் சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும்.
* ருக்மணி லட்சுமிபதி சாலையில் எத்திராஜ் சாலையில் இருந்து வரும் வாகனங்களை ருக்மணி லட்சுமிபதி சாலை மற்றும் மாண்டியத் சாலை சந்திப்பில் இருந்து இடதுபுறமாக திரும்பி மாண்டியத் சாலை வழியாக எழும்பூர் அருங்காட்சியகம் சர்வீஸ் சாலை சென்று பாந்தியன் சாலை வழியாக பாந்தியன் ரவுண்டானா செல்லலாம்.
* மாண்டியத் சாலை மற்றும் மாண்டியத் லேனிலிருந்து வரும் வாகனங்கள் ருக்மணி லட்சுமிபதி சாலையின் இடதுபுறம் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மானசரோவர் ஆன்மீக யாத்திரைக்காகத் தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சென்ற 148 தமிழர்கள், கடும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சாகா என்ற [மேலும்…]
சமூக நலத்துறை தொடர்பான மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில் (27.08.2026) பல்வேறு கட்சியினர் வெவ்வேறு விவாதங்களை முன்வைத்து பலத்த அமளியும் கூச்சலும் எழுப்பினர். இந்தநிலையில் [மேலும்…]
ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி தலைமையில் தமிழகத்தில் இருந்து 150 பேர் நேபாளம் சென்றவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. “கைலாஷ் யாத்திரை சென்ற [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஆகஸ்ட் 26ஆம் நாள் பெய்ஜிங்கில் சீனாவுக்கான அமெரிக்கத் தூதர் [மேலும்…]
பண்பாடு தொடர்பான ஷி ச்சின்பிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் முதல் தொகுதியும் இராண்டாவது தொகுதியும் அண்மையில் சீனா முழுவதிலும் வெளியிடப்பட்டுள்ளன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது [மேலும்…]