கோடை மழை.

Estimated read time 0 min read

Web team

IMG_20240320_085853_450.jpg

கோடை மழை ! கவிஞர் இரா .இரவி !

கோடை மழை கொண்டாட்டம் தரும்
கொடிய வெப்பம் குறைத்து இதம் தரும் !
குளம் கண்மாய் ஏரி ஆறுகள் நிரம்பிடும்
குதூகலமாகக் குழந்தைகள் விளையாடிடும் !
வராது வந்த மாமழை எனப் போற்றிடுவோம்
வளம் பெருக்க வந்த மழை எனப் பாராட்டுவோம் !
வாடி நிற்கும் பயிர்கள் துளிர்த்து வளர்ந்திடும்
வேதனையில் உள்ள விவசாயிகள் மகிழ்வார்கள் !
காதலியைக் கண்ட காதலன் போல
கழனியில் உள்ள உழவர்கள் மகிழ்வார்கள் !
நிலத்தடி நீரின் உயரம் உடன் உயர்ந்திடும்
நிலம் செழிக்கும் வளம் கொழிக்கும் !
அனல் காற்று குளிர் காற்றாக மாறிடும்
அனைவருக்கும் மகிழ்ச்சி மனதில் பொங்கும் !
அண்டை மாநிலங்களிடம் கெஞ்ச வேண்டிய
அவசியம் இல்லாது ஒழிந்து போகும் !
இடியுடன் கூடிய கனமழை பொழிந்தால்
இன்னல்கள் தீரும் இன்பம் பெருகும் !
குடி தண்ணீர் பஞ்சம் இல்லாது போகும்
குடித்திடத் தண்ணீர் எல்லோருக்கும் கிட்டும் !
வெப்பமயமாதல் இல்லாது போகும்
வசந்தம் வரும் வாசமலர் மலரும் !
பட்ட மரங்களில் இலைகள் வளரும்
பட்ட துன்பங்கள் காணாமல் போகும் !
இயற்கை நம்மை கைவிடாது காக்கும்
இயற்கையை மதித்தால் நன்மை தரும் !
கோடை மழையை வாருங்கள் வரவேற்போம்
குடை பிடிக்காது நனைந்து மகிழ்ந்திடுவோம் !

Please follow and like us:

You May Also Like

More From Author