குருதிக்கொடை

Estimated read time 0 min read

Web team

nkn4.jpg

குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி !

தானத்தில் சிறந்தது ரத்த தானம் !
தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம் !

குருதிக்கொடை வழங்கிடுக மனம் உவந்து
உறுதியாக உறுதி பெரும் பெற்றவர் உயிர் !

விபத்தில் காயம் பட்டவர்களுக்குத் தேவை குருதி !
விரைவில் ஏற்றினால் உயிர் பிரியாது வாழும் !

பிஞ்சுக் குழந்தைகளுக்கு தேவைப்படும் குருதி !
பிஞ்சு மொட்டுகள் கருகாமல் காக்கும் குருதி !

நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தேவைப்படும் குருதி !
நோய் நீங்கிட உதவிடும் வழங்கிடும் குருதி !

ரத்ததானம் வழங்குவது மனிதநேயம் !
ரத்ததானம் வழங்கிட விழிப்புணர்வு வேண்டும் !

ரத்த தானத்தால் பிழைத்த உயிர்கள் பல !
ரத்த தானத்தால் வாழும் உயிர்கள் பல !

பணம் தருவதை விட ரத்தம் தருவது மேல் !
குணம் இருந்தால் போதும் கொடுக்கலாம் !

பார்வையற்றோர் பயமின்றி குருதி தருகின்றனர் !
பார்வையுள்ளோர் பயப்படுகின்றனர் குருதி தருவதற்கு !

இறைக்கும் கிணறுதான் தானே ஊரும் !
இரக்கத்துடன் ரத்தம் தந்தால் தானே ஊரும் !

உதவிடும் உள்ளமே மனிதனின் மகத்துவம் !
உதிரம் தந்து உதவுவது உயர்ந்த உள்ளம் !

உயிர் காக்கும் பணி ஒப்பற்ற பணி !

இனிதே மனம் உவந்து உதவுவது நற்பணி !

தர்மம் தலை காக்கும் என்பார்கள் !

தரும் ரத்தம் தலை காக்கும் உண்மை !

மனிதனை மனிதன் காப்பது கடமை !

மனிதனாகப் பிறந்ததன் அர்த்தம் விளங்கும் !

கொடைகளில் சிறந்த கொடை குருதிக்கொடை !

கொடைக் கொடுத்து காப்போம் உயிர்களை !

தன்னலமாக வாழ்வது வாழ்க்கை அன்று !

பொதுநலமாக வாழும் வாழ்க்கை நன்று !

தான் உண்டு தன் உயிர் உண்டு வாழ்வது நன்றன்று !
தான் உண்டு பிறருக்குத் தொண்டு உண்டு வாழ் நன்று !

Please follow and like us:

You May Also Like

More From Author