இரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – நாகர்கோவில், கோவையில் பரப்புரை செய்கிறார்!

Estimated read time 0 min read

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக, பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். வரும் 15ம் தேதி நாகர்கோவிலில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர், 18ம் தேதி கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதையொட்டி கோவையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author