சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் இதயமாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கும், கடல்வழிப் போக்குவரத்தை பாதுகாப்பதற்கும் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ராணுவத் திட்டமிடுபவர்கள் இன்று லண்டனில் கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாடு, உலகளாவிய பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் முன்னெடுத்துள்ள இந்த முயற்சியில், ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
அமெரிக்கா தனது சொந்தத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் சூழலில், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தலைமையில் ஒரு புதிய பாதுகாப்புப் படை உருவாக்கப்படவுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை மீட்க லண்டனில் 30 நாடுகள் ரகசிய ஆலோசனை?
