இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி  

Estimated read time 1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்கப்பட்டு வருவது குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவித்ததைத் தொடர்ந்து, சர்ச்சை வெடித்துள்ளது.

எனினும், ஆப்பிள் நிறுவனம் அதன் தொடர்ச்சியான முதலீடு மற்றும் இந்தியாவில் உற்பத்தியை விரிவாக்கம் செய்வதற்கான தனது நீண்டகால உறுதிப்பாட்டை இந்திய அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது என்று அரசாங்க வட்டாரங்கள் கூறியதாக சிஎன்பிசி-டிவி18 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியா சார்பான உற்பத்தித் திறனில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

முன்னதாக, டோஹாவில் நடந்த ஒரு நிகழ்வின் போது, ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கை விமர்சித்த டிரம்ப், இந்தியாவில் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நிறுவனத்தின் முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

You May Also Like

More From Author