கன்னியாகுமரிசட்டமன்றத் தொகுதியில் தேர்தல் அதிகாரிகள் முறையாக தபால் வாக்குகளை எண்ணாமல் வெற்றியை அறிவித்துள்ளதாகக் கூறி, திமுக வேட்பாளர் மகேஷ் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறார்.
2026 கன்னியாகுமரி சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் 214 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் பலன் கிடைக்காததால், திமுக தலைமை ஒப்புதலுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர மகேஷ் திட்டமிட்டுள்ளார்.
இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் மாவட்ட அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை! கன்னியாகுமரியில் நீதிமன்றத்தை நாடும் திமுக வேட்பாளர் மகேஷ்!
