மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா இடையே ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தின் பின்னணியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நேரடித் தலையீடு இருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா அமைப்பினருக்கு இடையே அண்மையில் எட்டப்பட்ட அவசரப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குத் தான் தான் இஸ்ரேலை வற்புறுத்தியதாக டிரம்ப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தைகளை இந்த வன்முறை முற்றிலும் முடக்கிவிடும் என்பதால் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
