ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் 100 அல்லது 500 ரூபாய் நோட்டுகளைப் போட்டு, அதனை எடுப்பவர்களை மயக்கமடையச் செய்து கொள்ளையடிக்கும் புதிய பாணி குற்றச்சம்பவங்கள் குறித்துக் காவல் அதிகாரி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடுத்துள்ள எச்சரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘cop_mohit_gurjar’ என்ற கணக்கில் காவல்துறை அதிகாரி பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், “சாலையில் தனியாகக் கிடக்கும் பண நோட்டுகளைப் பார்த்தவுடன், குறிப்பாகப் பெண்கள் அதனை எடுக்கும் தவறைச் செய்ய வேண்டாம்.
<a href=”http://
“>
அந்த நோட்டுகளில் தடவப்பட்டிருக்கும் பிசுபிசுப்பான ஒருவகை இரசாயனத்தின் வாசனையால் நீங்கள் அங்கேயே மயங்கி விழக்கூடும், அந்த நேரத்தில் அருகில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகள் உங்களைக் கொள்ளையடிக்கவோ அல்லது கடுமையான குற்றங்களை இழைக்கவோ வாய்ப்புள்ளது” என்று எச்சரித்துள்ளார்.
