ஹார்முஸ் ஜலசந்தியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஈரான் முயன்று வரும் சூழலில், அந்தப் பிராந்தியத்தில் உள்ள ஈரான் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பேரில், CENTCOM இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் ஏவுகணை அமைப்புகள், வான் பாதுகாப்பு தளங்கள், படகுகள் ஆகியவற்றை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தின.
இந்தத் தாக்குதலில் ஈரானின் பண்டார் அப்பாஸ் மற்றும் கெஷ்ம் தீவில் உள்ள ராணுவ உள்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பராமரிப்பு ஊழியர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி மோதல்: ஈரான் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்; வளைகுடா நாடுகளில் பரவும் போர் பதற்றம்
