தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி வாக்கில் அதே பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் திரண்டுள்ள மேகக் கூட்டங்கள் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்வதால், தென் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
