ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லேசான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், தூதரக முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில் ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
மிச்சிகன் நோக்கி ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணம் செய்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஈரானுடன் நேர்மறையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இதில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
“நாங்கள் நல்ல பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம், இதில் ஒரு நல்ல தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படி நடக்கவில்லை என்றால், இரண்டு நாட்களுக்கு முன்பு வரை நாங்கள் என்ன செய்து கொண்டிருந்தோமோ அதை மீண்டும் தொடங்குவோம்” என்று அவர் கூறினார்.
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை தோற்றால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
