இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரை இறங்கியதன் நினைவாகக் கொண்டாடப்படும் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கும் விஞ்ஞானிகளுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி அரங்கில் இந்தியாவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், 2047க்குள் விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) என்ற இலக்கை எட்டுவதற்கு விண்வெளித் துறை மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
தேசிய விண்வெளி தினம் 2026: ஜென் ஜி மற்றும் தனியார் துறை குறித்துப் பிரதமர் மோடி பெருமிதம்
