ஒடிசா மாநிலத்தின் பாராதீப் கடற்கரையில் இருந்து சுமார் 240 நாட்டிக்கல் மைல் தொலைவில், 24 மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த பனாமா நாட்டின் கொடி பொருத்தப்பட்ட எம்.வி ஓஷன் வின்னர் என்ற சரக்குக் கப்பல் வங்கக் கடலில் எதிர்பாராதவிதமாக மூழ்கியது.
ஒடிசாவில் இருந்து இரும்புத் தாதுக்களைக் ஏற்றிக் கொண்டு சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஆபத்தில் சிக்கியுள்ள மாலுமிகளை மீட்க இந்தியக் கடலோரக் காவல் படையும் இந்தியக் கடற்படையும் இணைந்து தீவிர மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளன.
வங்கக் கடலில் நடுவழியில் மூழ்கிய சரக்குக் கப்பல்! 24 மாலுமிகளைக் காப்பாற்ற இந்தியக் கடலோரக் காவல் படை நடவடிக்கை
