சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் 23ஆம் நாள் முற்பகல் மக்கள் மா மண்டபத்தில் சாங் ஏ 6 சந்திர மண்டல ஆய்வு கலத்தின் ஆய்வு மற்றும் சோதனையில் ஈடுபட்ட பணியாளர்களின் பிரநிதிநிகளைச் சந்தித்து, முக்கிய உரை நிகழ்த்தினார். சந்திர ஆய்வுத் திட்டப்பணியின் சாதனை, கடந்த சில ஆண்டுகளில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் சுய வலிமையில் சீனா பெற்றுள்ள மாபெரும் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. சீன நவீனமயமாக்கத்தின் மூலம் வல்லரசு கட்டுமானம் மற்றும் தேசிய மறுமலர்ச்சியை பன்முகங்களிலும் முன்னேற்றுவதற்கான ஆற்றலை சந்திர ஆய்வு எழுச்சி திரட்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சாங் ஏ 6 கலத்தின் சந்திர ஆய்வுக் கடமை, பல முக்கிய தொழில் நுட்பங்களில் முன்னேற்றமடைந்து, விண்வெளி வல்லரசு மற்றும் அறிவியல் தொழில் நுட்ப வல்லரசைக் கட்டியமைப்பதில் இன்னொரு மாதிரியுடைய சாதனையாகவும், சீனாவின் சந்திர ஆய்வு திட்டப்பணியில் முக்கிய மைல்கல்லாகவும் விளங்குகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
விண்வெளி ஆய்வு, மனித குலத்தின் பொது இலட்சியமாகும். பல வடிவங்களில் விண்வெளி துறையின் சர்வதேச பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக முன்னேற்றி, பன்னாடுகளுடன் வளர்ச்சி சாதனைகளைப் பகிர்ந்து கொண்டு, அறிவியல் தொழில் நுட்ப சாதனைகளை மனித குலத்திற்கு மேலும் செவ்வனே நன்மை பயக்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.