ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல்  

Estimated read time 0 min read

தரம்சாலாவில் வியாழக்கிழமை (மே 8) பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) இடையேயான போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஐபிஎல் 2025 சீசன் தொடர்ந்து நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்துள்ள பதட்டங்களுக்கு மத்தியில், அருகிலுள்ள ஜம்மு மற்றும் பதான்கோட்டில் விமானத் தாக்குதல் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து தரம்சாலா போட்டியை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில், மீதமுள்ள போட்டிகளின் எதிர்காலத்தை மதிப்பிடுவதற்கு உயர்மட்டக் கூட்டம் நடத்தப்படும் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாக, ஸ்போர்ட்ஸ் நவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author