வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியுடன் அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதில், அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது
இந்நிலையில், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வாகியுள்ளார்.
சென்னை மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில், பாமக பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமாவும் தேர்வாகியுள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த நிலையில், அன்புமணி தலைமையில் கூடிய பொதுக்குழுவில் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொண்டுள்ளனர். இரு அணிகளான செயல்பட்டு வந்த பாமக ஒன்றாக இணைந்துள்ளது.
