2026 ஆம் ஆண்டு பிப்ரவரியில், இந்தியாவும், இலங்கையும் ஆண்கள் டி20 உலகக் கோப்பையை நடத்தவுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி ஐசிசி போட்டியில் பாகிஸ்தானுடன் போட்டியிட வாய்ப்பில்லை.
இருப்பினும், ஜூலை 17-20 வரை சிங்கப்பூரில் நடைபெற உள்ள வருடாந்திர மாநாட்டிற்காக உறுப்பினர்கள் கூடும் போது, ICC இது குறித்து இறுதி முடிவை எடுக்கும்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர் அரசியல் பதற்றம், அவர்களின் உலக கிரிக்கெட் சந்திப்புகளை வெறும் ஐசிசி போட்டிகள் எனக்குறைத்துவிட்டது.
இருப்பினும், ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலையும் அதைத் தொடர்ந்து இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மோதலையும் அடுத்து, இந்த ICC போட்டிகளும் நடப்பது சந்தேகம் என ஆகிவிட்டது.
2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனி குழுக்களாகப் பிரிக்கப்பட வாய்ப்புள்ளது
