விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

Estimated read time 0 min read

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் 3 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

யுவராஜ் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்த போது இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அங்கு தீயணைப்பு துறையினரும் போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author