ஜமைக்கா சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு!

Estimated read time 0 min read

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கரீபியன் தீவு நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கரீபியன் தீவு நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் நோக்கில் ஜமைக்கா, சுரினாம் மற்றும் டிரினிடாட் அண்ட் டொபாகோ ஆகிய நாடுகளுக்கு, ஜெய்சங்கர் ஒன்பது நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டன் சென்றடைந்த ஜெய்சங்கர், அதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஜமைக்கா வெளியுறவு அமைச்சர் கமீனா ஸ்மித் அளித்த அன்பான வரவேற்பால் நெகிழ்ந்து போனதாக குறிப்பிட்டுள்ளார். ஜமைக்கா நாட்டு தலைவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாட ஆவலுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author