சென்னை தியாகராய நகரில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழ் முற்றம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
சென்னை தியாகராய நகரில் சரி வேதாந்த பவனம் அரங்கில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழ் பண்பாடு, இலக்கியம் மற்றும் பாரம்பரியத்தை முன்னிறுத்தும் வகையில் தமிழ் முற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புலவர் சண்முகவடிவேல் கலந்து கொண்டு “கம்ப சித்திரம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
