மத்திய சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

Estimated read time 1 min read

தெற்கு மற்றும் மத்திய சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து முடங்கியுள்ளதுடன், மின்சாரம் மற்றும் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டதால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சுய்ஜியாங் (SUIJIANG) ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் பல பகுதிகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹுவைஜி மாநகரில் ((HUAIJI)) 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

You May Also Like

More From Author