கன்னியாகுமரி கடற்பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது.
அதன்படி சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் மற்றும் குளச்சல் கடல் பகுதிகள்வரை பாதுகாப்புப் படையினர் இரு குழுக்களாக பிரிந்து அதிநவீன படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள கடலோர பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.