திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடல் – போக்குவரத்து மாற்றம்!

Estimated read time 1 min read

திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடப்படும் நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது.

திருச்சி மாநகரில் அதிக போக்குவரத்து நிறைந்த சாலைகளில் ஒன்றாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. இச்சாலையில், காவிரி ஆற்றின் குறுக்கே பழமையான பாலம், புதிய பாலங்கள் உள்ளது. மதுரையில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் சாலையில் ஒரு வழிபாதையாக பழைய காவிரி பாலமும், சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரை, நெல்லை செல்லும் வாகனங்கள் அனைத்தும் புதிய பாலத்தின் வழியாக ஒரு வழிப்பாதையில் செல்கின்றது.

இதுதவிர, மாநகரில் உள்ள அனைத்து பொதுமக்களும் போக்குவரத்துக்கு இப்பாலங்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி ஸ்ரீரங்கம் இடையே அமைந்துள்ள பழைய காவிரி பாலத்தை வலுப்படுத்தும் பணிகள் பராமரிப்பு வகையில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்.. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள காவிரி பழைய பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நேற்று ஜூன் -25 ஆம் தேதி நள்ளிரவு முதல் பாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

மேலும் திருச்சி – சென்னை தேசிய நெஞ்சாலையில் அமைந்துள்ள பழைய காவிரி பாலம் கட்டப்பட்டு 63 ஆண்டுகள் ஆகிறது. ஆங்காங்கே பழுது ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டாலும், அதில் உள்ள பேரிங்குகள் சேதமடைந்துள்ளது. அதனால், பாலம் முழுக்க உள்ள 170 பேரிங்குகள் முழுமையாக மாற்றி, பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளவும், 3 மாதங்களுக்குள் இப்பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதுவரை, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் ஸ்ரீரங்கம் பகுதிகளை இணைக்கும் பழைய காவிரி பாலம் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு பாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம் :

பராமரிப்பு பணிகளுக்காக பாலம் மூடப்பட உள்ளதால், திருச்சியிலிருந்து சென்னை வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் சஞ்சீவி நகரிலிருந்து புதிய காவிரி பாலம், கொண்டையம்பேட்டை வழியாகவும், சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள் சா்க்காா்பாளையம் அணுகுசாலை, கொண்டையம்பேட்டை, புதிய காவிரி பாலம், சஞ்சீவி நகா் வழியாகவும் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author